திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனை மருத்துவரும், வழக்கறிஞரும் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன். 4 மாத கர்ப்பிணியான மனைவி பூவரசிக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்வதற்காக துரைமுருகன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முழு பரிசோதனைகள் முடிந்த நிலையில், மருத்துவர்களிடம் பூவரசியின் உடல்நிலை குறித்து துரைமுருகன் கருத்து கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாரதி என்ற மருத்துவர், துரைமுருகன் மற்றும் பூவரசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதை கவனித்த வழக்கறிஞர் தமிழ் அன்பு என்பவர், நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்கும்படி மருத்துவர்களிடம் பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த மற்றொரு மருத்துவர் தானேஸ்வரன், வழக்கறிஞர் தமிழ் அன்புவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்ததால், இருவரும் சரமாரியாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், பிற மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?