புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மலேசியாவில் சிக்கியுள்ள இளைஞரை மீட்டு நாளை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மலேசியாவில் வேலை செய்துவரும் தன்னை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகையை சேர்ந்த நந்தக்குமார் என்பவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
Acting on the news report of @PTTVOnlineNews reached out to Shri Nanda Kumar stuck in Malaysia. Our mission @hcikl is facilitating his repatriation. He is expected to leave Malaysia on 11 Sep. @narendramodi @PMOIndia @AmitShah @DrSJaishankar @MEAIndia @VMBJP pic.twitter.com/KXu4Prtu4P— V. Muraleedharan (@MOS_MEA) September 9, 2019
நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே உள்ள பெரிய குத்தகை கிராமத்தை சேர்ந்த நந்தக்குமார், கடந்த 12 ஆம் தேதி மலேசியாவில் உள்ள கோமதி உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். உறுதியளித்தபடி உரிய பணிகளை வழங்காமல் வேறு பணிகளை கொடுத்த தன்னை துண்புறுத்துவதாக நந்தக்குமார் வேதனை தெரிவித்திருந்தார். உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் ஹோட்டல் நிர்வாகம் ஊருக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை என ஆடியோ வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்த செய்தியை புதியதலைமுறை வெளியிட்டது. இந்நிலையில் மலேசியாவில் சிக்கியுள்ள இளைஞரை மீட்டு நாளை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ட்வீட் செய்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!