விக்ரம் லேண்டர் பின்னடைவு குறித்து நாக்பூர் காவல்துறை வேடிக்கையாக ஒரு ட்வீட் செய்துள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி கடந்த சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லேண்டரை தரையிறக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஆர்பிட்டரின் தெர்மல் புகைப்படம் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் அதிலிருந்து தகவல் தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதற்காக ஆர்பிட்டரை நிலவிற்கு அருகில் கொண்டு செல்லும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாக்பூர் காவல்துறையின் சார்பில் விக்ரம் லேண்டருக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாக்பூர் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “டியர் விக்ரம், தயவு செய்து தொடர்புக்கு வாருங்கள். நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம் எதுவும் விதிக்க மாட்டோம்” என வேடிக்கையாக பதிவிடப்பட்டுள்ளது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?