சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் ராஜினாமா கடிதம் தற்போது வரை ஏற்கப்படாத நிலையில், நாளை அவர் வழக்குகளை விசாரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகளின் பட்டியலை சென்னை உயர்நீதிமன்ற பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், தலைமை நீதிபதி தஹில் ரமாணியும், நீதிபதி துரைசாமியும் முதல் அமர்வில் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதற்கு அதிருப்தி தெரிவித்து, தஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா கடித்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றாலும், ராஜினாமா கடிதம் அனுப்பியவர் எவ்வாறு வழக்குகளை விசாரிப்பார் என வழக்கறிஞர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
Loading More post
பாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அமித்ஷாவுடன் சந்திப்பு
கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!
"சசிகலா பூரண குணமடைய வேண்டும்" - ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்
குடியரசு தின அணிவகுப்பு: உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
'முன் எப்போதும் இல்லாத' பட்ஜெட் 2021-ல் சாமானிய மக்களின் தேவைகள் என்னென்ன?!
திரையும் தேர்தலும் 3 - அண்ணா எழுத்தில் 'வேலைக்காரி'... புதுப்பாதை தொடங்கிய புள்ளி!
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?