தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து நிலவின் ஆய்வில் முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான்-2 விண்கலத்தின், விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவில் தரையிறங்கும் என இந்தியாவே காத்திருந்தது. ஆனால், தரையிறங்க 2.1 கிலோமீட்டர் தொலைவு இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்க முடியாமல் போனதால் சோகத்தில் இருந்த இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து நிலவின் ஆய்வில் முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவிகித பணிகளை எட்டிவிட்டோம் என தெரிவித்துள்ள இஸ்ரோ நிலவின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டப்படி ஆர்பிட்டர் சுற்றிக் கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளது. ஆர்பிட்டரில் உள்ள கருவி மூலம் நிலவில் உள்ள நீர் மூலக்கூறுகள் மற்றும் கனிம வளங்களை ஆராய முடியும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.
முந்தைய திட்டங்களை ஒப்பிடும்போது சந்திரயான் 2 திட்டத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரோ, சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து அதன் ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகள் உற்றுநோக்கி கவனித்துக் கொண்டுவந்தன எனக் கூறியுள்ளது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!