நீச்சல் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
கோவா நீச்சல் அணி பயிற்சியாளராக இருந்தவர் சுரஜித் கங்குலி. இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ, வெளியாகி பரபரப்பானது. பாதிக்கப்பட்ட வீராங்கனையும் சுரஜித்தின், பாலியல் தொல்லை குறித்து வீடியோவில் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து வீராங்கனையின் தந்தை போலீசில் புகார் செய்தார். கோவா போலீசார், பயிற்சியாளர் சுரஜித் கங்குலி மீது பாலியல் வன்கொடுமை உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் படியும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சுரஜித் கங்குலி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே அவரை, கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அம்மாநில நீச்சல் சங்கம் உடனடியாக நீக்கியது. மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவருக்கு இந்திய நீச்சல் சங்கம் நேற்று தடை விதித்தது.
Loading More post
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் - மோசடி செய்து முதல் பரிசு பெற்றது அம்பலம்?
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!