"ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

"ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
"ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது" - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத்தேவர் 40வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், மூக்கையாத்தேவரும் அண்ணன் தம்பியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்டனர். மூக்கியாத்தேவர் நினைவு தினத்தில் அவரை போற்றுகிறேன்.  எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கனவு உலகத்தில் வாழ்கிறார். அவரது கனவு என்றும் பலிக்காது. 

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜெயலலிதா ஆட்சியை மக்கள் நலனுக்காக தற்போது உள்ள அரசும் நடைமுறை படுத்தி வருகிறது” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com