விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தர மறுத்ததால் பனியன் கம்பெனி மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் பனியன் நிறுவனம் மீது, அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னனியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பனியன் கம்பெனியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது மட்டுமின்றி, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தும் கும்பல், கையில் கிடைத்த பைப்களைக் கொண்டு பனியன் கம்பெனி ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பனியன் கம்பெனி கொடுத்த புகாரின் அடிப்படையில், அனுப்புர்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தங்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதாக பனியன் கம்பெனியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஒரு குழுவிற்கு பணம் தந்து, மற்றொரு குழுவிற்கு பணம் தரவில்லை என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” - இந்து சமய அறநிலையத்துறை
கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!