கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை நிலவரத்தை வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 191 கார்களை விற்று மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்தது. மாருதி நிறுவனத்தின் மற்றொரு காரான டிசயர் 21 ஆயிரத்து 37 என்ற எண்ணிக்கையுடன் 2வது இடத்திலும் 18 ஆயிரத்து 649 கார்களுடன் மாருதி பேலனோ 3வது இடத்திலும் உள்ளது.
மாருதியின் ஆரம்ப நிலை காரான அல்டோ 14 ஆயிரத்து 378 எண்ணிக்கையுடன் 4வது இடத்திலும் மாருதியின் மற்றொரு காரான விடாரா பிரெஸா 14 ஆயிரத்து 378 எண்ணிக்கையுடன் 5 வது இடத்திலும் உள்ளது. விற்பனை எண்ணிக்கையில் முதல் 6 இடங்களையும் மாருதி கார்களே இடம் பெற்றுள்ளன.
ஆனால் சமீபகாலமாக கார் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பு மாருதி 800 கார் தயாரிப்பை அந்நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில், கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்