தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
லாரிகளின் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது, வருவாய்த்துறையும், காவல்துறையும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டிருந்தனர். இதுபோன்ற அணுகுமுறையைக் கைவிடவும், தண்ணீர் எடுக்க முறையாக உரிமம் வழங்க வேண்டும் என்றும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
நிலத்தடி நீரை கனிமவளத்திலிருந்து பிரித்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கினர். தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் தண்ணீர் வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னையில் மட்டும் 4,500 வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. போராட்டத்தால், 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
இந்நிலையில் தனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நிலத்தடி நீர் எடுக்க முறையான அனுமதி உள்ளிட்ட லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?