விஷால் போராட்டம்: தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு

விஷால் போராட்டம்: தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு
விஷால் போராட்டம்: தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு

விஷால் நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், திருட்டு விசிடி உள்ளிட்ட, திரையுலகப் பிரச்னையை தீர்க்கக் கோரி, மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது. தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘வருகிற 30ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என்று செய்திகள் வருகின்றன. அது உண்மையல்ல, அன்று வழக்கம் போல அனைத்து தியேட்டர்களிலும் படங்கள் ஓடும்’ என்று கூறியுள்ளனர்.

இந்த அறிக்கையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com