தண்ணீர் தேடி வந்த மான் குட்டி : நாய்கள் கடித்து பரிதாப பலி

தண்ணீர் தேடி வந்த மான் குட்டி : நாய்கள் கடித்து பரிதாப பலி
தண்ணீர் தேடி வந்த மான் குட்டி : நாய்கள் கடித்து பரிதாப பலி

(மாதிரி புகைப்படம்)

ராமநாதபுரத்தில் தண்ணீர் குடிக்க வந்த மான் குட்டி, நாய்கள் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை கிராமத்தில் கண்மாய் ஒன்று உள்ளது. இதனைச்சுற்றி உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் புள்ளிமான்கள் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக  திருவாடானை தாலுகாவில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. 

இதனால் காட்டுக்குள் இருக்கும் மான்கள் குடிநீருக்காக கிராம பகுதிகளுக்கு வருகின்றன. அவ்வாறு தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் சுற்றி வளைத்து கடித்துக் கொன்று விடுகின்றன. அந்த வகையில் தண்ணீர் குடிக்க வந்த 6 மாத மான்குட்டி ஒன்றை நாய்கள் கடித்து கொன்றுள்ளன. இதனைத்தடுக்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மான்கள் வாழும் இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com