நீலகிரியின் 4 தாலுக்காவிற்கு இன்றும் விடுமுறை 

நீலகிரியின் 4 தாலுக்காவிற்கு இன்றும் விடுமுறை 
நீலகிரியின் 4 தாலுக்காவிற்கு இன்றும் விடுமுறை 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவில் இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழையால் நேற்று முன்தினம் நீலகிரியின் மூன்று தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்திருந்தார். அதன்படி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று கனமழையின் தொடர்ச்சியால் 4 தாலுக்காக்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. 

இந்நிலையில், கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவிற்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி அவலாஞ்சியில் ஒரே நாளில் 40 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அப்பவானில் 22 செ.மீ, நடுவட்டத்தில் 11 செ.மீ, தேவாலாவில் 10 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com