துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்ளும் அஜித்குமார்!

துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்ளும் அஜித்குமார்!
துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்ளும் அஜித்குமார்!

கோவையில் நடைபெறும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 10மீ பிரிவில் நடிகர் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தான் ஒரு நடிகர் என்றாலும் கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கலக்கி வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்ப காலங்களில் கார் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளார்.

பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்து வந்த அஜித் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் இணைந்து பணியாற்றினார். அஜித் இணைந்துபணியாற்றிய தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது. இந்நிலையில் தன் கவனத்தை துப்பாக்கிச் சுடுதல் பக்கம் திருப்பினார் அஜித். துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி கோவையில் தொடங்கி State Rifle Championship 2019ல் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று சென்னை ரைபல் கிளப் சார்பில் அஜித்குமார் 10 மீட்டர் பிரிவில் பங்கேறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com