முத்தலாக் மசோதா குறித்த அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரின் பேச்சு டங் ஸ்லிப் போன்றதுதான் என்று முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறியுள்ளார்.
முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மக்களவையில் ஆதரவு தெரிவித்திருந்தார். இது குறித்து புதிய தலைமுறைக்கு அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பேசிய போது, “முத்தலாக் மசோதா குறித்த அதிமுகவின் நிலைப்பாடு ரவீந்திரநாத் குமாருக்கு சரியாக போய்ச் சேரவில்லை. சரியாக தகவல் போய்ச் சேராததால் ரவீந்திரநாத் முதலில் ஆதரித்துள்ளார்.
முதலில் தவறாக பேசினாலும் இப்போது கேட்டால் சரியாக பேசுவார் ரவீந்திரநாத். மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றுவதால் அது குறித்து சரியாக படிக்கமுடியவில்லை. முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதே அதிமுகவின் நிலைப்பாடு” என்று கூறினார்.
முத்தலாக் தடுப்பு மசோதாவிற்கு மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?