ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான நிசான் இந்தியாவில் ஆயிரத்து 700 பேரை பணியிலிருந்து அனுப்ப முடிவு செய்துள்ளது.
வாகன விற்பனையில் தொடரும் மந்தநிலை காரணமாக, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சர்வதேச அளவில் நிசான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆறாயிரம் பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ரெனால்ட் - நிசான் ஆலையில் ஆயிரத்து 700 பேரின் பணி பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
வாகன விற்பனை துறை மந்தநிலையில் காணப்படுவதால் பல நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து வருகின்றன. நிசான் நிறுவனத்தின் லாபம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்ததால், செலவினங்களைக் கட்டுப்படுத்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!