நீலகிரியில் ஆடுகளை வனத்திற்கு அருகில் மேய்த்துக்கொண்டிருந்தவர் அப்பகுதியில் இருந்த யானை ஒன்று தூக்கி வீசியதில் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் கோத்தகிரி கண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலன் (66). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வனத்திற்கு அருகில் நேற்று மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த யானை ஒன்று பாலனை தூக்கி வீசியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று இரவு முழுவதும் பாலன் வீட்டிற்கு வராததால், இன்று பாலனை காட்டுப் பகுதியில் தேடிப்பார்த்தனர்.
அப்போது அவர் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பாலன் உயிரிழந்ததையடுத்து, ஊரோரம் திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
'இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்து': தீவிர விசாரணையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி