மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு கிறிஸ்துவர் என்றும் அவர் மாநிலங்களவைக்குச் சென்று இந்து கலாச்சாரத்தை குப்பையாக்குவார் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக கூறி தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்தத் தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனு ஏற்கப்படுமா ? என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது. பின்னர், அவரது மனு ஏற்கட்டத்தை அடுத்து வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் மாநிலங்களவையில் கால்பதிக்க உள்ளார்.
இந்நிலையில், வைகோ மாநிலங்களவை எம்.பி ஆவது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டரில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், “வி.கோபால் சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவரின் குழப்பமான கருத்தியல் மீது உடன்பாடு கொண்டவர். மிஷனரி கொள்கை உடைய இவர் மாநிலங்களவைக்குள் நுழைந்தால் அது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சீர்குலைக்கும்” என்று விமர்சித்துள்ளார்.
Loading More post
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!