கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட்டிற்கு வைத்து பேசிய செல்போன் வெடித்ததால் இளைஞர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே புளியரிசி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் சொந்த வேலை காரணமாக ஓசூருக்கு இருச்சகர வாகனத்தில் சென்றுள்ளார். கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்ற போது அவருக்கு போன் வந்துள்ளது. இதையடுத்து செல்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்துக்கொண்டு பேசியவாறு அவர் சென்றுள்ளார். அப்போது திடீரென்று செல்போன் வெடித்து தலை, காது, கை பகுதியில் படுயங்களுடன் அவர் கீழே விழுந்தார்.
உடனே அங்கு கூடிய மக்கள் காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் விவோ ஸ்மார்ட்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிக்கொண்டு சென்றார் என்பது தெரியவந்துள்ளது.
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்