இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை ஆட்டத்திறன் குறித்து ஆய்வு செய்யப்படுமென பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் உலகக்கோப்பை தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் கூறினார். எனினும் ஆய்வுக்கூட்டம் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.
இங்கிலாந்திலிருந்து விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தாயகம் திரும்பியவுடன் இந்தக்கூட்டம் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
ஆய்வுக்கூட்டத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர்களும் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்த அம்பத்தி ராயுடு அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் எனவும் தெரிகிறது.
இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி