பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் வழக்கு குறித்து சர்வதேச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எழுப்பியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்திடமிருந்து அதிகாரப்பூரவ தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளார் கோபல் பேக்ளே தெரிவித்தார். முன்னதாக ஜாதவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டிருந்தது. இதையேற்று ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்திய கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஈரானில் தொழிலில் ஈடுபட்டிருந்த ஜாதவ் அங்கிருந்து கடத்தப்பட்டதாக இந்தியா கூறியிருந்தது. ஆனால் அவர் பலூசிஸ்தானில் மார்ச் 5ம் தேதி கைது செயப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவதாகவும் இந்தியா வாதிட்டிருந்தது. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி