இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் கருணரத்னே 10, குசல் பெராரா 18 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேறினர்.
அதனை தொடர்ந்து குசல் மெண்டீஸ் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர், பெர்னாண்டோ 20 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இலங்கை அணி 55 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. மேத்யூஸ் - திரிமனே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. அந்த அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பிங்கில் தோனியின் மெஜிக்கை அதிகம் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. அவர் பெரிதாக விக்கெட் அதிகம் எடுக்காமல் இருந்தார். சில போட்டிகளில் விமர்சனம் செய்யும் வகையில் அவரது விக்கெட் கீப்பிங் அமைந்திருந்தது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல் நான்கு விக்கெட்டும் தோனியின் கைகளில் ஆட்டமிழக்கப்பட்டது. மொத்தம் மூன்று கேட்ச், ஒரு ஸ்டம்பிங். இதனை தோனியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?