அடிப்பட்ட தெரு நாய்க்கு மருந்தாளர் ஒருவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் தெரு ஒன்றில் சுற்றித் திரிந்த நாய்க்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாய் ஒரு மருந்துகடையின் வாசலில் சென்று நின்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மருந்து கடையிலிருந்து மருந்தாளுநர் அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது.
இந்த வீடியோவில், காயமடைந்த நாய் தன் காலினை மருந்தாளுனரின் கையில் வைத்து சிகிச்சை பெறுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன. அதற்குப் பின் சிகிச்சை முடிந்தவுடன் அந்த நாய் மருந்தாளுநருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தரையில் படுத்துகொள்வது போல் கட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக சிகிச்சை அளித்த மருந்தாளுநர் பானு சென்கிஸ், “நான் இந்த நாய்க்கு சிகிச்சை அளித்தேன். அதற்குப் பின் எனக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நாய் செய்தது என்னை மனம் நெகிழவைத்தது” எனத் தெரிவித்தார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!