தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர், அமைச்சர்‌கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்‌. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை, அதற்கான எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. 

ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம்  முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். தமிழகத்தில் நீடிக்கும் குடிநீர் பிரச்னை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்‌படுகிறது. ஏற்கனவே 2நாட்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கேரள அரசிடம் இருந்து நீரை பெறுவது குறித்தும் இன்றையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com