தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசும் நிலையில் வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பார்க்கலாம்.
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படும் என்பதால், காலை 11 மணி முதல் 3 மணி வரையில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள சீரான இடைவெளியில் தண்ணீர் பருக வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
அதிக அளவில் இளநீர், பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், கர்ப்பிணிகளும், வயதானவர்களும் வெயிலால் அதிக பாதிப்பிற்குள்ளாவார்கள் என்பதால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வெளியே செல்வதை தவிர்ப்பதே அவர்களின் உடலுக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள் நேரடியாக திடீரென அதீத வெயிலில் செல்வது உடலுக்கு தீங்கு என்றும் கூறப்படுகிறது.
வேலை நிமித்தம் உள்ளிட்ட காரணங்களால் வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க முடியாது என்பதால் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அதற்கான முன்னேற்பாடுகளுடன் செல்வதே சிறந்தது என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை