இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 வது முறையாக தோற்கடித்தது. இதையடுத்து இந்திய அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இணையதளத்தில், இந்திய அணியை பாராட்டி பற்றி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார்.
அதில் அவர், ‘இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை விட முக்கியமானது கே.எல்.ராகுல் நின்று ஆடியது. தவான் இல்லாத நிலையில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ராகுல் எப்படி ஆடப் போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இறங்கி நூறு ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பானது. இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அருமையாக ஆடி ரன் குவித்தார்கள். இது அணி தொடர்ந்து முன்னேற உதவியது. பாகிஸ்தான் அணிக்கு முன், குல்தீப் யாதவ் பற்றி கவலை இருந்தது. அவர் ஃபார்மில் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், பாபர் ஆஸம் விக்கெட்டை வீழ்த்தியது பரபரப்பான பந்துவீச்சு. இந்திய அணியை விட, பாகிஸ்தான் அணிக்குத்தான் அதிக அழுத்தம் இருந்தது.
விராத் கோலி தலைமையில்லான இப்போதைய இந்திய அணியை பார்க்கும்போது, 1970-களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி என் ஞாபகத் துக்கு வருகிறது. இந்திய அணியுடன் விளையாடும் எதிரணிகள் மனரீதியாக பாதிப்படைகிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. இதனால் எப்படி ஆடப்போகிறோம் என்று முன் வைத்த காலை பின் வைத்துவிடுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!