“மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது” - ராம் தேவ்

“மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது” - ராம் தேவ்
“மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது” - ராம் தேவ்

மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என சட்டம் கொண்டுவரவேண்டும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என சட்டம் கொண்டு வரவேண்டும். 

அப்போதுதான் மக்கள் ஜனத்தொகையை குறைக்க முடியும். அடுத்த 50 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக மாறுவதை நாம் தடுக்க வேண்டும். தற்போது எந்த வாக்காளர்களும் அரசு அளிக்கும் சலுகைகளை முழுமையாக பெறமுடியவில்லை. 

இவ்வாறு சட்டம் கொண்டுவந்தால் மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்கமாட்டார்கள். அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி. 

மாடு படுகொலைக்கு தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே மாடு கடத்தல்காரர்களுக்கும் மாடு பாதுகாப்பவர்களுக்கும் இடையே நடக்கும் வன்முறைகளை தடுக்க முடியும். இறைச்சி சாப்பிட வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு பல இறைச்சிகள் உண்டு. 

எல்லா நாடுகளும் மதுபானத்திற்கு தடை விதிக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மது தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளால் முடியும்போது இந்தியாவில் ஏன் தடை செய்யமுடியவில்லை. இது முனிவர்கள் வாழ்ந்த பூமி. இந்தியாவில் மதுவை முழுமையாக தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com