உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு ஏதாவது ஒரு பங்களிப்பை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை அந்த அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நிராகரித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே. 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11814 ரன்னும் 448 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 12650 ரன்னும் எடுத்துள்ள, ஜெயவர்த்தனே, ஐபிஎல் தொடரில், மும்பை இண்டியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளரான அவரை, உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணிக்கு ஆலோசகர் அல்லது ஏதாவதொரு பங்களிப்பை அளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
இலங்கையில் முதல்தர கிரிக்கெட்டை மேம்படுத்த, முன்னாள் கேப்டன்களான ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா, அரவிந்த டி சில்வா உள்ளிட்டோர் அடங்கிய குழு, அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதை இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜெயவர்த்தனே உள்ளிட்ட குழுவினர் அதிருப்தியில் இருந்தனர். அதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.
இதுபற்றி ஜெயவர்த்தனே கூறும்போது, ‘’இலங்கை கிரிக்கெட் வாரியம் எனக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தது. அணி தேர்வில் இருந்து எல்லாம் முடிந்துவிட்ட பின், என்னால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை