நாட்டின் நன்மதிப்பை காப்பாற்ற அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
தம்மை மீண்டும் வெற்றி பெற செய்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், ரேபரேலி தொகுதி வாக்காளர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், தம்மை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாத சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமது வாழ்க்கை ஒர் திறந்த புத்தகம் என்றும், மக்களே தமது குடும்பம் என்றும் கூறியுள்ள சோனியாகாந்தி, மக்களிடம் இருந்து பெறும் வலிமையே, தமது உண்மையான சொத்து என உருக்கமாக கூறியுள்ளார்.
இனிவரும் காலங்கள் மிக கடுமையானதாக இருக்கும் என்பதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள சோனியா, மக்களின் பேராதரவை கொண்டு அனைத்து சவால்களையும் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்