அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்புமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில், ‘தம்பிகளே வாரீர் தாய்வீடு அழைக்குது’ என்ற தலைப்பில் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. கூடாத இடம் சேர்ந்த கர்ணனை நினைத்துப் பார் எனத் தொடங்கும் அந்த கவிதையில், ஒரு நொடியும் தாமதிக்காது உடனே வந்து கழகம் சேர் என்று அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இபிஎஸ் - ஓபிஎஸ் இணைகரத்தால் அழைக்கும் அவ்வை சண்முகம் சாலைக்கு அன்போடு வந்து சேர் என்றும், திசை மாறிய பறவைகளே திரும்பி வந்து கூடுசேர் என்றும் அந்தக் கவிதையின் வரிகள் அமைந்துள்ளன. தீது வழி விட்டு தூய வழி திருந்திச் சேர் என்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கே திரும்புமாறு அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?