இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 338 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 2வது பயிற்சி போட்டி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே வேல்ஸில் உள்ள சோபியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 21 (15) எடுத்து அவுட் ஆகினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹாசிம் அம்லா மற்றும் டு பிளசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு தென்னாப்பிரிக்க அணி 338 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிக பட்சமாக கேப்டன் டு பிளசிஸ் 88 (69) ரன்கள் குவித்தார். அம்லா 65 (61), டஸன் 40 (41) மற்றும் அண்டிலி 35 (34) ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த டிவைன் மற்றும் மோரிஸ் தலா 13 பந்துகளில் 25 மற்றும் 26 ரன்களை எடுத்தனர். இலங்கை அணியில் லக்மால் மற்றும் பிரதீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தற்போது 339 என்ற கடினமான இலக்கை எதிர்த்து இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்கத்திலேயே அந்த அணியில் குசல் பெராரா மற்றும் திரிமன்னே ஆகிய இரண்டு பேரும் 0 (2) மற்றும் 10 (11) என்ற ரன்களில் வெளியேறி சொதப்பினர். 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த 58 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?