நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மோடி மற்றும் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று பாஜக கூட்டணி வெற்றிப் பெறவுள்ளது. இதற்காக டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அமித் ஷா உரையாற்றினார். அதில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மணமார்ந்த நன்றி. இது மோடி அரசின் சிறப்பான கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. ஏனென்றால் இந்திய தேர்தல் வரலாற்றில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி இரண்டு முறை தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. பாஜகவிற்கு எதிராக சந்திரபாபு நாயுடு கூட்டணி சேர்க்க முயற்சிக்காமல் சரியாக பிரச்சாரம் செய்திருந்தால் அவர் ஆந்திராவில் ஒரு தொகுதியிலாவது வெற்றிப் பெற்றிருப்பார். அதேபோல மேற்குவங்கத்தில் 18 இடங்களை பாஜக வென்றுள்ளது. இனிவரும் தேர்தல்களில் பாஜக மேற்குவங்கத்திலும் பலத்தை நிரூப்பிக்கும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “பாஜகவை மீண்டும் ஆட்சியமைக்க வைத்ததற்கு தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றி. 2019ஆம் ஆண்டு தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்திய மக்களின் இந்தச் செயலை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றனர். இந்தத் தேர்தலில் வெற்றிப்பெற்றது வேட்பாளர்களோ அல்லது கட்சியோ இல்லை. உண்மையில் வெற்றிப் பெற்றது இந்திய மக்கள் மற்றும் இந்திய குடியுரசும்தான். இதனால் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன். தனி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றிருந்தாலும் என்னுடைய ஆட்சி அனைவரையும் ஒன்றிணைத்த ஒன்றாகதான் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?