பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், குறைவான வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.
பாஜவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார். அதோடு, ஆத் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பிரசாரம் செய்தார்.
பெங்களூரு மத்திய தொகுதியில், காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்ஷத், பாஜக சார்பில் தற்போதைய எம்.பி, பி.சி.மோகன் உட்பட பலர் போட்டி யிட்டனர். இந்நிலையில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் 2,86,969 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த தேர்தலில், 1.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரிஸ்வானை தோற்கடித்திருந்தார் மோகன். இப்போது அவரை விட ரிஸ்வான் முன்னிலையில் உள் ளார்.
இந்நிலையில், சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?