தங்களது நிபந்தனையை ஏற்றால் எடப்பாடி பழனிசாமி அணிக்கு நல்லது நடக்கும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’வரும் 5ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தொண்டர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்குவதற்காக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம். எங்களது நிபந்தனையை ஏற்றால் எடப்பாடி பழனிசாமி அணிக்கு நல்லது நடக்கும். சுற்றுப்பயணத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் தொடர்பு இல்லை. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும்’ என அவர் தெரிவித்தார்.
Loading More post
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!