ஆந்திரபிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டசபை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. ஆளும் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. அதேபோல், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறும் என்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன். 0.1 சதவீதம் சந்தேகம் கூட எனக்கு இல்லை. நாங்கள் தான் வெற்றி பெற போகிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “50 சதவீதம் இடங்களில் விவிபேட் வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். விவிபேட் பிரச்னை எங்களுக்கு முக்கியமானது. நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான சிலீப் கொடுத்தோம், நாம் நம்பலாம். தற்போது, ஒரு தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் விவிபேட் உள்ளது” என்று தெரிவித்தார்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?