மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்லில், இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் மீதமுள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் அன்றைய தினமே தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் நேற்றிரவு 10 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், கடந்த மாதம் 18ஆம் தேதி நடந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்ட 13 வாக்குச்சாவடிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த 4 தொகுதிகள் இடைத்தேர்தல் மற்றும் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
கடைசி நாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர். மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?