ஐஐடி பேராசிரியர் பெயரில் போலி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி செந்தாமரைக்கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அருணாச்சலம் என்ற காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் காவல்துறை விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில், ஒரு கேள்விக்கு தான் சரியான பதில் எழுதியதாகவும், அதற்கு உரிய மதிப்பெண் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், சரியான விடை எது என்பதை ஐஐடியில் பணியாற்றும் கணித நிபுணரிடம் அறிக்கை பெற்றுத்தரும்படி உத்தரவிட்டனர். அதன்படி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பெயரில் பேராசிரியர் யாரும் பணியாற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய அனுமதியுடன், செந்தாமரைக் கண்ணனை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை