செய்யும் வேலையிலும் விருப்பமில்லை, திருமண வாழ்க்கையும் கைகூடவில்லை எனக்கூறி எனவே தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி 35 வயதான ஒருவர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
புனேவைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் செய்யும் வேலையிலும் தனக்கு விருப்பமில்லை என்றும் திருமணவாழ்க்கையும் கைகூடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெற்றோர்களுக்கு தான் எதையுமே செய்யவில்லை. தன்னை கருணைக்கொலை செய்ய அனுமதியுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த காவல் உயர் அதிகாரி தேவிதாஸ், ''கடிதத்தில் அவர் தந்தைக்கு 83 வயது தாய்க்கு 70 வயது என குறிப்பிட்டுள்ளார். பெற்றோருக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என மன உளைச்சலில் இருக்கிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் கூட அவருக்கு மன அழுத்தமாக இருக்கிறது.
அவர் நன்கு படித்தவர். பெற்றோர் மீது அதிக அன்பு வைத்துள்ளார். கைகூடாத திருமண வாழ்க்கையால் விரக்தியடைந்துள்ளார். நாங்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் '' என தெரிவித்துள்ளார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?