மோடி மீண்டும் பிரதமர் ஆனால், நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை நடிகை ஷபானா ஆஸ்மி மறுத்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி. இவரும் இவரது கணவர் பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் அரசியல்வாதிகளின் தவறுகளை பகிரங்கமாக சமூகவலைத்தளங்களில் கண்டிப்பது வழக்கம். பாஜக அரசையும் அதன் சில நடவடிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து கண்டித்து வந்தனர். இதனால் அவர்களை பாஜகவினர் கடுமையாக சாடி வந்தனர்.இந்நிலையில் தேர்தலுக்குப் பின் மோடி, மீண்டும் பிரதமரானால் கணவருடன் நாட்டை விட்டு வெளியேறுவதாக நடிகை ஷபானா ஆஸ்மி கூறியதாக தகவல் வெளியானது.
இதை மறுத்துள்ள ஷபானா ஆஸ்மி, ‘’தோல்வி பயத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற பொய்யை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இந்தியாவை விட்டு வெளியேறுவதாக நான் எப்போதும் சொன்னதில்லை. நான் இந்தியாவில் பிறந்தவள். என் இறப்பும் இங்குதான் நிகழும். இந்த பொய்ச் செய்திகளுக்கு கண்டனம் தெரிவிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதது வேதனையாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!