வேலூரில் கடைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புலிக்குட்டை கிராமத்தை சேர்ந்த முதியவர் வெங்கடாசலம் (75). இவரது மகன் குண்டுமணி என்கின்ற கிருஷ்ணன். இவர்கள் இருவரும் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடையில் பொருள் வாங்க வந்த 13 வயது சிறுமியை அப்பா, மகன் இருவரும் வீட்டிற்குள் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனை அந்தச் சிறுமியோடு வந்த தோழி பார்த்துவிட்டு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். பிறகு அந்தச் சிறுமியை அவள் தோழி இழுத்துச் சென்று அவருடைய அம்மாவிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் அம்மாவும், ஊர் பொதுமக்களும் இணைந்து விசாரித்துள்ளனர். அத்துடன் அப்பா, மகன் இருவரும் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் இருவரையும் அழைத்து சென்று காவல்துறையினர், காவல் ஆய்வாளர் பழனி தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரும், வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் எனச் சிறுமியை மிரட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?