நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இதை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி செய்துள்ளார்.
எம்.டி.அபகஸ் (MT Apecus) என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்த மாதம் கடத்தினர். இதுபற்றி அந்தக் கப்பலில் பணி யாற்றும் மாலுமி சுதீப் குமார் சவுதாரியின் மனைவி பாக்யஸ்ரீ தாஸ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு தனது கணவரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து 5 இந்திய மாலுமிகள் கடத்தப்பட்ட தகவல் பத்திரிகைகளில் வெளியாயின.
இந்நிலையில் இதை உறுதி செய்துள்ள சுஷ்மா சுவராஜ், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் இதுபற்றி அறிக்கைக் கேட்டிருப்பதாகவும் அரசுடன் பேசி கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தியிருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?