5வது கட்ட மக்களவை தேர்தல் 51 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்
மக்களவை தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக 373 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 5வது கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் 5வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 12 தொகுதிகளில் இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 7 தொகுதிகளி்ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகாரில் 5 தொகுதிகளிலும் ஜார்க்கண்டில் 4 தொகுதிகளிலும் காஷ்மீரில் இறுதிக்கட்டமாக 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
இந்த தேர்தலில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்காக மொத்தம் 94 ஆயிரம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் 4 கட்டத் தேர்தலிலும் அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற மேற்கு வங்கத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் நடைபெற உள்ள இறுதிக் கட்டத் தேர்தலுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!