முத்தூட் நிதி நிறுவனத்தின் நடந்த கொள்ளை சம்பவத்தில், காதலுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது செய்யப் பட்டார்.
கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சனிக்கிழமை 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
முகத்தை துணியால் மறைத்தபடி நிதி நிறுவனத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த 2 பெண்களும் மயக்கமடைந்ததாகவும் பிறகு சாவி மூலம் பெட்டக அறையை திறந்த அடையாளம் தெரியாத நபர், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 4 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையனை தேடி வந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் பணியாற்றிய பெண் ஊழியரே, காதலனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. பெண் ஊழியர் ரேணுகா தேவி தன் காதலன் சுரேஷூடன் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி யுள்ளார். சுரேஷ் தாக்குவது போல காதலியை தாக்கி, நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். விசாரணையில் இதை ஒப்புக்கொண்டார் ரேணுகா தேவி. இதையடுத்து அவரையும் அவர் காதலன் சுரேஷையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
Loading More post
இந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’!
“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
முகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்
6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை