இரட்டை குடியுரிமை புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமை பெற்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக ராகுல்காந்தி ஆதாயம் தரும் பதவி வகித்து வருவதாக பாரதிய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், பிரிட்டனின் வின்செஸ்டர் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவும், செயலாளராகவும் ராகுல் காந்தி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் செலுத்திய 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் தாக்கலில் ராகுலின் பிறந்த தேதி சரியாக குறிப்பிடப்பட்டு, பிரிட்டனைச் சேர்ந்தவர் என சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உண்மை நிலை என்னவென்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
இந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு 'ஆல் அவுட்’!
“பாஜக கால் ஊன்றக் கூடாது; 6 தொகுதிகளில் விசிக தனிச்சின்னத்தில் போட்டி” - திருமாவளவன்
திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
முகக்கவசம் அணிந்து வந்தால்தான் வாக்களிக்க அனுமதி: தேர்தல் ஆணையம்
6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை