மன அழுத்தத்திலுள்ள போது அதிக கலோரி உணவுகளை உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என ஒரு ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான மக்கள் சந்திக்கும் உடல் சாந்த முக்கிய பிரச்னை அதிக உடல் எடை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதற்கு அதிக பேர் நம்புகின்ற ஒரே காரணம் அதிக உணவை உட்கொள்வது. அத்துடன் சரியான உடற்பயிற்சி இல்லாதது. இவை இரண்டும்தான் பிரதான காரணம் என நினைக்கிறார். இதன் உண்மை தன்மையை உறுதி செய்ய மக்களின் உணவு பழக்கம் குறித்து உலகளவில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு ஆய்வில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
அதன்படி நாம் மன அழுத்தத்திலிருக்கும் போது அதிக கலோரி கொண்ட உணவு பொருட்களை உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘கார்வென் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ரிசர்ச்’ என்ற அமைப்பு ஆய்வை நடத்தியுள்ளது. அதில் எலியை வைத்து ஒரு சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த எலி மன அழுத்ததுடன் இருந்த போது உயர்ந்த கலோரி உணவை எடுத்து கொண்டால் அதன் உடல் எடை அதிகரித்துள்ளது. ஆனால் இதே உணவை அந்த எலி சாதாரண மனநிலையில் உள்ளபோது உட்கொண்ட போது உடல் எடை அதிகரிப்பது சற்று குறைந்துள்ளது.
இது குறித்து ஆய்வாளர்கள், “மன அழுத்தத்தின் போது மூளைக்குச் செல்லும் பாதையிலுள்ள இன்சூலின் இந்த எடை அதிகரிப்பதற்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் அதிகரிக்கும் போது மூளையிலுள்ள என்.பி.ஒய் மாலிக்குள் சுரப்பை இன்சூலின் அதிகரிக்கிறது. இந்த என்.பி.ஒய் மாலிக்குள் அதிகமாகும் போது உயர்ந்த கலோரி கொண்ட உணவை உட்கொண்டால் அது உடல் பருமனுக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாம் மன அழுத்ததிலுள்ள போது உட்கொள்ளும் உணவில் அதிக கவனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!