தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்து திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டன. ஆனால் அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இவ்விரு கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர். நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 98 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், அதிகப்பட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 42 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சூலூர் தொகுதியில் 23 வேட்புமனுக்களும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 20 வேட்புமனுக்களும், ஒட்டப்பிடாரத்தில் 13 வேட்புமனுக்களும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 98 வேட்புமனுக்களில் 62 வேட்புமனுக்கள் சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?