9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது
மக்களவை தேர்தல் இதுவரை 302 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 4ம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடம் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் 3வது கட்டமாக 17 தொகுதிகள் தேர்தலைச் சந்திக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்காளத்தில் 4வது கட்டமாக 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் தலா 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் 5 தொகுதிகளிலும் ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவை தவிர காஷ்மீர் மாநிலத்தில் அனந்த் நாக் தொகுதியில் ஒரே ஒரு பகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஒரு தொகுதியில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
4ம் கட்டத் தேர்தலில் 945 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 12 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 849 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. பதற்றம் நிறைந்த வாக்கு மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!