ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை தொடர்பாக கேரளாவில் ஒருவர் சிக்கினார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி நடந்த கொள்ளை முயற்சியில் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் காயமடைந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எஸ்பி முரளிரம்பா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்தக் கொலை தொடர்பாக தற்போது கேராளாவைச் சேர்ந்த ஒருவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அளக்கரை அருகே உள்ள ஒரு சொகுசு பங்களாவில், கொள்ளை குறித்து திட்டம் தீட்டியதாகவும், கோடநாடு எஸ்டேட் பங்களா அருகே பதுங்கி இருந்து பல நாட்கள் உளவு பார்த்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் ஆவணங்கள், நகைகளை எடுத்துச் செல்ல கொள்ளை நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Loading More post
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!