கச்சிதமான சுழல்பந்துவீச்சு - மீண்டும் அசர வைத்த சிஎஸ்கே

கச்சிதமான சுழல்பந்துவீச்சு - மீண்டும் அசர வைத்த சிஎஸ்கே
கச்சிதமான சுழல்பந்துவீச்சு - மீண்டும் அசர வைத்த சிஎஸ்கே

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சென்னை அணியில் வாட்சனும், டுபிளிசிஸும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 56 ரன்கள் எடுத்தது. 

வாட்சன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், சிறப்பாக விளையாடிய டுபிளிசிஸ் அரைசதம் அடித்தார். ஆனால், டுபிளிசிஸ் (54), ரெய்னா இருவரும் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரெய்னா 20 பந்துகளை சந்தித்து 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், ராயுடு, தோனி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரன்ரேட் வேகம் குறைய தொடங்கியது.

18வது ஓவரில் இருந்து தோனியும், ராயுடுவும் அடித்து விளையாடினர். அதனால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எட்டியது. தோனி 23 பந்தில் 37 ரன்களும், ராயுடு 15 பந்தில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அஸ்வின் மூன்று விக்கெட் சாய்த்தார். பஞ்சாப் அணிக்கு 161 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், பஞ்சாப் அணி 2 ஓவரில் 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை பறிகொடுத்தது. கெயில் 5 ரன்னில் ஹர்பஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்திலே மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.

ஆனால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி சரிவை தடுத்தது. அதேபோல், சீரான இடைவெளியில் ரன்களையும் சேர்த்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பஞ்சாப் அணியின் பக்கம் திரும்பியது. பஞ்சாப் அணி 14 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியது. இருவரும் அரைசதம் அடித்தனர். ஆனால், ஹர்பஜன், இம்ரான் தஹிர், ஜடேஜா ஆகியோர் மிகவும் கச்சிதமாக பந்துவீச ரன்களை கட்டுப்படுத்தினர். அதனால், இறுதியில் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

கே.எல்.ராகுல் 55(47) ரன்னில் ஆட்டமிழக்க, இறுதியில் சர்பராஸ் கான் 67(59) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணிக்கு இது நான்காவது வெற்றி ஆகும். பஞ்சாப் அணிக்கு இது 2வது தோல்வி. சென்னை அணி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com