பி.எம். நரேந்திர மோடி படத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்டவைகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.
இந்நிலையில் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரிலான திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியாவது, தேர்தல் நடத்தை விதிமீறல் எனத் தேர்தல் ஆணையத்தில் புகார்கள் கூறப்பட்டன.
இதைத் தொடர்ந்து படம் குறித்து விளக்கம் தர படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஓபராயும், தயாரிப்பாளர் சந்தீப் சிங்கும் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்தனர்.
பிரதமர் மோடியின் பெயரால் எடுக்கப்பட்ட திரைப்படம் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இல்லை என அப்படக்குழுவினர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல பேர் பி.எம்.நரேந்திர மோடி படத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதுகுறித்த விசாரணையில் தேர்தல் விதிமுறைகளை இந்தப் படம் மீறுவதாக நாங்கள் கருதவில்லை எனவும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Loading More post
துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்
கொரோனா அச்சம்: கோயம்பேடு சந்தையில் சிறு கடைகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிப்பு
சூரப்பா மீதான விசாரணை 80% நிறைவு - ஆணையம்
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனாகால நிதி - அரசாணை வெளியீடு
பீகார்: உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாகக்கூறி இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட அவலம்